17 ஆண்டுகளுக்குப் பிறகு அடிலெய்டில் தோல்வி - 150 டாட் பால்கள்... கில் கேப்டன்சி சொதப்பல்கள்!

2 months ago 4
ARTICLE AD BOX

அடிலெய்டில் நேற்று (அக்.23) பகலிரவுப் போட்டியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா கடைசி வரை போராடி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடரை 2-0 என்று கைப்பற்றியுள்ளது. சிட்னியில் மீதமிருக்கும் 3-வது ஒருநாள் போட்டி வெறும் சம்பிரதாயப் போட்டியாகவே இருக்கும்.

இந்த போட்டியில் இந்திய அணி எதிர்கொண்ட மொத்தம் 300 பந்துகளில் 151 பந்துகள் ரன் இல்லாத டாட் பால்கள் என்றால் எப்படி போட்டியை வெல்ல முடியும்? ரோஹித் சர்மாவால் முதல் 40 பந்துகளில் வெறும் 10 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. செம தடவலோ தடவல். ஆனால் அதன் பிறகு எழுச்சி பெற்று நல்ல இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். கடைசி வரை நின்றிருந்தால் ஒருவேளை 300 ரன்களை எட்டியிருக்கலாம் அப்போது ஆஸ்திரேலியாவுக்கு இலக்கை எட்டுவது கடினமாகியிருக்கலாம். இப்படி ஏகப்பட்ட விஷயங்களுக்கு இடையே ஷுப்மன் கில் - கவுதம் கம்பீர் அணித்தேர்வு முறை, கில்லின் கேப்டன்சி தவறுகள் என்று எக்கச்சக்கமாக சிக்கல்கள் எழுந்துள்ளன.

Read Entire Article