‘19-வது ஓவரால் ஆட்டம் போச்சு…’ - சிஎஸ்கே கேப்டன் தோனி

7 months ago 8
ARTICLE AD BOX

பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி குறித்து சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறும்போது, “முதன்முறையாக நாங்கள் போதுமான அளவில் ரன்கள் சேர்த்தார். ஆனால் இது சராசரிக்கு சற்று குறைவான ஸ்கோர் என்றே கருதுகிறேன். இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பீல்டிங்கில் கேட்ச்களை நாங்கள் எடுத்திருக்க வேண்டும்.

பேட்டிங்கில் டெவால்ட் பிரேவிஸ், சேம் கரண் ஆகியோர் அமைத்த பார்ட்னர்ஷிப் அற்புதமானது. கடைசி ஓவரில் 4 பந்துகளை நாங்கள் விளையாடாமல் விட்டுவிட்டோம். 19-வது ஓவரில் 4 பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர். நெருக்கமான ஆட்டங்களில் இந்த 8 பந்துகளும் மிகவும் முக்கியமானது.

Read Entire Article