7 வயது சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞருக்கு 14 ஆண்டு கடுங்காவல் சிறை 

4 months ago 6
ARTICLE AD BOX

திருவள்ளூர்: திரு​வள்​ளூர் மாவட்​டம், ஆவடி அருகே உள்ள முத்​தா புதுப்​பேட்டை பகு​தியை சேர்ந்​தவர் 7 வயது சிறு​வன். இச்சிறுவனை, கடந்த 2023-ம் ஆண்டு ஏப். 14-ம் தேதி, முத்​தாபுதுப்​பேட்​டையை அடுத்த பால​வேடு பகு​தியை சேர்ந்த பிர​வீன் (21) பாலியல்​ரீ​தி​யாக துன்​புறுத்​தி​யுள்​ளார். இதுதொடர்​பாக சிறு​வனின் பெற்​றோர் அளித்த புகாரின் அடிப்​படை​யில், பட்​டாபி​ராம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீ​ஸார், போக்சோ சட்​டத்​தின் கீழ் வழக்​குப் பதிவு செய்​து, பிர​வீனை கைது செய்​தனர்.

இந்த வழக்கு விசா​ரணை, திரு​வள்​ளூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்​றத்​தில் நடை​பெற்று வந்​தது. முடிவுக்கு வந்த வழக்கு விசா​ரணை​யில், பிர​வீன் மீதான குற்​றம் நிரூபிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, இவ்​வழக்கு தொடர்​பான தீர்ப்​பை, திரு​வள்​ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதி​மன்ற நீதிபதி உமா மகேஸ்​வரி நேற்று முன் தினம் அளித்​தார்.

Read Entire Article