ARTICLE AD BOX

அறுபத்து மூன்று நாயன்மார்களில், மூன்று பேர் பெண்கள். அவர்களில் மூத்தவர், காரைக்கால் அம்மையார். சிறந்த சிவபக்தரான அவரைப் பற்றிய புராணக்கதையை மையப்படுத்தி உருவான படம், ‘காரைக்கால் அம்மையார்’. சி.வி.ராமன் தனது கந்தன் கம்பெனி சார்பில் தயாரித்து இயக்கிய படம் இது. பாபநாசம் சிவன் இசை அமைத்தார்.
வி.ஏ.செல்லப்பா, பி.சரஸ்வதி, கே.சாரங்கபாணி, கே.ஆர்.செல்லம், காளி என்.ரத்தினம், டி.எஸ்.ஜெயா, ‘பேபி’ கல்யாணி, சாந்தா தேவி, டி.எஸ்.துரைராஜ், கொளத்து மணி, மாதவன், ராமையா சாஸ்திரி, குஞ்சிதபாதம் பிள்ளை என பலர் நடித்தனர்.

3 months ago
5





English (US) ·