ARTICLE AD BOX

சென்னை: நகைகளை பாலீஷ் போட்டு வருவதாகச் சென்ற நகை பட்டறை ஊழியர் 94 பவுன் நகையுடன் மாயமானது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் சம்சு அலாம் (48). இவர் ஓட்டேரி படவேட்டம்மன் கோயில் தெருவில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் நகை பட்டறை நடத்தி வருகிறார். இந்த பட்டறையில் 50-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளாக மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் நசீம் (28) என்பவரும் பணியாற்றி வந்தார். இவர் நகைகளை பாலீஷ் போடும் வேலை செய்து வந்தார்.

10 months ago
9







English (US) ·