Asia Cup: 'அப்படி அவர் என்ன தவறு செய்தார்?' - ஆதங்கப்பட்ட அஷ்வின்

4 months ago 6
ARTICLE AD BOX

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

ஆசியக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை நேற்று (ஆகஸ்ட் 19) பிசிசிஐ வெளியிட்டிருந்தது.

ஆசிய கோப்பைக்கான இந்திய அணிஆசிய கோப்பைக்கான இந்திய அணி

அதன்படி சூர்யகுமார் யாதவ் (கேப்டன்) ஷுப்மன் கில் (துணை கேப்டன்), அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங் ஆகியோர் ஆசியக்கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருக்கின்றனர்.

இந்த அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், சாய் சுதர்ஷன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் ஜெய்ஸ்வால் அணியில் இடம்பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அஷ்வின் பேசியிருக்கிறார்.

 ஸ்ரேயஸ் ஐயர் ஸ்ரேயஸ் ஐயர்

"ஸ்ரேயஸ் அப்படி என்ன தவறு செய்தார்? கொல்கத்தாவை கோப்பை வெல்ல வைத்தார். 2014ம் ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்றார்.

சாம்பியன்ஸ் ட்ராஃபியை வென்று கொடுத்தார். சுப்மன் கில்லுக்காக மகிழ்ச்சியடையும் அதே சமயத்தில் ஸ்ரேயஸ், ஜெயஸ்வாலுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்" என்று பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article