IPL 2025: ``இந்த வீரர்கள் எல்லாம் சிறப்பாக விளையாடுகிறார்கள்'' - அஷ்வின் சொல்லும் வீரர்கள் யார்?

8 months ago 8
ARTICLE AD BOX

18-வது ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஷ்வின் ரவிசந்திரன் தனது யூடியூப் சேனலில் ஐபிஎல் தொடர்பாகப் பல விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

அந்தவகையில் ஐபிஎலில் சிறப்பாக விளையாடி வரும் வீரர்கள் குறித்து அஷ்வின் பேசுகையில், "இந்த சீசனில் நிறைய வீரர்கள் நன்றாக விளையாடுகிறார்கள்.

பிரியான்ஷ் ஆர்யாபிரியான்ஷ் ஆர்யா

குறிப்பாக பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாகப் பேட்டிங் செய்கிறார். கடந்த வருடம் டெல்லி ப்ரீமியர் லீக்கில் பல ரெக்கார்டுகளை முறியடித்திருந்தார். ஒரு வீரரிடம் நல்ல பேட்டிங் ஸ்டைல் இருக்கிறது.

பயமில்லாமல் இருக்கிறார்கள் என்றால் ரிக்கி பாண்டிங்கின் (பஞ்சாப் அணியின் பயிற்சியாளர். களத்தில் வீரர்களை இறக்கி விட்டுவிடுவார். அதன் அடிப்படையில் பிரியான்ஷ் ஆர்யாவையும் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார். அதற்கேற்ப அவரும் சிறப்பாக விளையாடி வருகிறார்.

ஹர்திக் பாண்டியா  ஹர்திக் பாண்டியா

தவிர ஹர்திக் பாண்டியாவும், ரஜித் பட்டிதரும் கேப்டன்ஷியை சிறப்பாக கையாளுகிறார்கள். அதுபோல புவனேஷ் குமாரும், க்ருனால் பாண்டியாவும் அற்புதமாக விளையாடுகிறார்கள்" என்று பேசியிருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read Entire Article