ARTICLE AD BOX
நேற்று ( ஏப்ரல்1) நடந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் 16.2 ஓவரில் 177 ரன்கள் விளாசி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
LSG vs PBKSஇந்தப் போட்டியில் லக்னோ அணியின் துவக்க வீரர் பிரியான்ஷ் ஆர்யா ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தார். அவர் 9 பந்துகளைச் சந்தித்து எட்டு ரன்கள் மட்டும் எடுத்து திக்வேஷ் சிங் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
பிரியான்ஷ் ஆர்யா ஆட்டமிழந்து, பெவிலியன் திரும்பியபோது, கையில் நோட் புக்கை வைத்துக் குறித்து வைத்துக்கொள்வது போல் திக்வேஷ் சிங் கிண்டல் செய்தார்.
அவரின் செயலைப் பார்த்த அம்பயர், திக்வேஷை இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அழைத்து எச்சரிக்கை விடுத்தார்.
திக்வேஷ் சிங் - பிரியான்ஷ் ஆர்யாஇந்நிலையில் பிசிசிஐ அவருக்குப் போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதம் விதித்திருக்கிறது. மேலும், ஐபிஎல் விதிமுறைகளை மீறியதற்காக ஒரு கண்டிப்பு (Demerit - டீமெரிட்) புள்ளியும் வழங்கப்பட்டு இருக்கிறது.
LSG vs PBKS: 'குறி வெச்சா இரை விழும்!' - லக்னோவை எப்படி வீழ்த்தினார் ஸ்ரேயாஷ் ஐயர்?Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

8 months ago
8







English (US) ·