Parandhu Po: "என்னுடைய எல்லா படைப்புகளிலும் இயக்குநர் ராம் இருப்பார்" - சித்தார்த் நெகிழ்ச்சி

6 months ago 7
ARTICLE AD BOX

இயக்குநர் ராம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'பறந்து போ' திரைப்படம் ஜூலை 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

மிர்ச்சி சிவா, அஜூ வர்கீஸ், கிரேஸ் ஆண்டனி எனப் பலரும் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் ராம்இயக்குநர் ராம்

சித்தார்த் பேசும்போது, "ராம் மிகச் சிறந்த படைப்பாளி. அது எல்லோருக்குமே தெரியும்.

அவருடைய எல்லாப் படைப்புகளிலும் உண்மையும் தேடலும் இருக்கும். எனக்கு ரொம்ப வருஷமாக நெருங்கிய நண்பர் அவர்.

ராம் சாருடைய முதல் சந்திப்பிலிருந்து இப்போ வரைக்கும், அவர் உட்கார்ந்திருந்தாலும், அவரைத் தலை நிமிர்ந்துதான் பார்ப்பேன்.

Parandhu Po: "என் மேல் ராம் சார் அன்பு வச்சிருக்கார்னு நினைச்சேன்; ஆனா..." - மிர்ச்சி சிவா

குழந்தைகளை எப்போதுமே ராம் சார் அற்புதமாக நடிக்க வைப்பார். உங்களைச் சிந்திக்க வைக்கும் அளவுக்குப் பல கேள்விகளை இந்தக் குழந்தை உங்களிடம் கேட்கும்.

மிர்ச்சி சிவா எப்போதுமே ஜாலியாக, வெளிப்படையாக இருப்பார். அதுதான் அவரைப் பலருக்கும் பிடிக்கக் காரணம். நான் இந்தப் படத்தைப் பார்த்துட்டு, கிரேஸ் ஆண்டனியோட கதாபாத்திரத்தைப் பற்றிப் பல விஷயங்களை ராம்கிட்ட பேசினேன்.

சித்தார்த் சித்தார்த்

என்னுடைய எல்லா படைப்புகளிலும் ராம் இருப்பார். அவருடைய அனைத்துப் படைப்புகளிலும் நான் இருக்கணும்னு அவர் ஆசைப்படுவார்" என்று பேசினார்.

Parandhu Po: "2009 ஈழப் பிரச்னைக்குப் பிறகு..." - இயக்குநர் ராமின் அரசியல் குறித்து மாரி செல்வராஜ்

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read Entire Article