ARTICLE AD BOX
2024 பாரீஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் இறுதிப் போட்டியில் வென்று தங்கத்துடன் நாடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 50 கிலோ எடைப் பிரிவைச் சேர்ந்த வினேஷ், நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோ எடையை விட 100 கிராம் அதிகம் இருந்ததால் கடைசி நேரத்தில் மல்யுத்த விதிமுறையின்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
வினேஷ் போகத்இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதன் பிறகு மனமுடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வையும் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர் ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
Vinesh Phogat: ஹரியானா: `நமக்காக யாரும் வரப்போவதில்லை..!' - விவசாயிகள் போராட்டத்தில் வினேஷ் போகத்இந்நிலையில், சர்வதேச மல்யுத்தப் போட்டிகளில் சாதனை படைத்ததற்காக அவரை கவுரவிக்க ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக அரசு முடிவு செய்தது.
ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை ஆகிய 3 வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றை வினேஷ் போகத் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் அவர், விருப்பத்தின்படி அரசு நடந்துகொள்ளும் என்றும் முதல்வர் நயாப் சிங் நைனி அறிவித்தார்.
வினேஷ் போகத்இந்த நிலையில் அரசு வேலை, வீடு ஆகியவை தனக்கு வேண்டாம் என்றும், ரூ.4 கோடி பரிசை தான் பெற்றுக் கொள்வதாகவும் வினேஷ் போகத் தெரிவித்திருக்கிறார்.
Vinesh Phogat: ``வினேஷ் போகத் அரசியலில் நுழைந்ததை எதிர்கிறேன்" -பெரியப்பா மஹாவீர் போகத் விமர்சனம்!Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel


8 months ago
8







English (US) ·