ARTICLE AD BOX

பாகிஸ்தான் வீரர்கள் ஹாரிஸ் ராவுஃப் மற்றும் சஹிப்சதா ஃபர்ஹான் ஆகியோர் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் அதிகாரபூர்வமாகப் புகார் எழுப்பியுள்ளது. அதே போல் இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மீது பிசிபியும் அதிகாரபூர்வ புகார் எழுப்பியுள்ளது.
கடந்த ஞாயிறன்று துபாயில் நடைபெற்ற ஆசியக் கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிராகக் களத்தில் இவர்களது செய்கை மற்றும் செயல்பாடுகள் மீது பிசிசிஐ புகார் எழுப்பியுள்ளது. புதன் கிழமையன்று மின்னஞ்சலில் ஐசிசிக்கு இந்தப் புகார் அனுப்பப்பட்டதாகவும் ஐசிசி அதைப் பெற்று விட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

3 months ago
4







English (US) ·