அ​திரடியாக விளையாடுவது எப்படி? - மனம் திறக்கும் வைபவ் சூர்யவன்ஷி

7 months ago 8
ARTICLE AD BOX

ஜெய்ப்​பூர்: ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் தொடரில் நேற்று முன்​தினம் ஜெய்ப்​பூரில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் குஜ​ராத் டைட்​டன்ஸ் அணியை 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யது ராஜஸ்​தான் ராயல்ஸ் அணி. 210 ரன்​கள் இலக்கை துரத்​திய ராஜஸ்​தான் அணி 25 பந்​துகளை மீதம் வைத்து 15.5 ஓவர்​களி​லேயே 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 212 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது.

14 வயதான வைபவ் சூர்​ய​வன்ஷி 38 பந்​துகளில், 11 சிக்​ஸர்​கள், 7 பவுண்​டரி​களு​டன் 101 ரன்​களும், யஷஸ்வி ஜெய்​ஸ்​வால் 40 பந்​துகளில், 2 சிக்​ஸர்​கள், 9 பவுண்​டரி​களு​டன் 70 ரன்​களும் விளாசி அணி​யின் வெற்​றி​யில் முக்​கிய பங்கு வகித்​தனர். இந்த போட்​டி​யில் சதம் விளாசி​யதன் மூலம் சூர்​ய​வன்ஷி பல்​வேறு சாதனை​களை படைத்​தார். போட்டி முடிவடைந்​ததும் அவர் கூறிய​தாவது: முதல் பந்​தில் சிக்​ஸர் விளாசுவது என்​பது எனக்கு சாதாரண விஷ​யம். நான் இந்​தி​யா​வுக்​காக 19 வயதுக்​குட்​பட்ட அணிக்​காக விளை​யாடி​யுள்​ளேன், மேலும் உள்​ளூர் அளவிலும் விளை​யாடி​யுள்​ளேன், அங்கு நான் முதல் பந்​தில் சிக்​ஸர்​களை அடித்​துள்​ளேன். முதல் 10 பந்​துகளை விளை​யாடும் போது நான் அழுத்​தத்​துக்கு உள்​ளானது இல்​லை. என்னை நோக்கி வரும் பந்​துகளை அடிக்க வேண்​டும் என்ற மனநிலை​யில் தெளி​வாக இருப்​பேன். நான் பந்துவீச்சாளரின் பெயரை அதிகம் பார்க்கவில்லை, பந்தைப் பார்த்து விளையாடுகிறேன். ஐபிஎல்லில் எனது முதல் சதம், அதுவும் 3-வது இன்னிங்ஸில் வந்துள்ளது. இது சிறப்பான உணர்வை கொடுக்கிறது.

Read Entire Article