ARTICLE AD BOX

புதுடெல்லி: செஸ் உலகக் கோப்பை போட்டி வரும் அக்டோபர் 30-ம் தேதி முதல் நவம்பர் 27 வரை இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) அறிவித்துள்ளது. போட்டி நடைபெறும் நகரம் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொடரில் 206 வீரர்கள் கலந்து கொண்டு பட்டம் வெல்ல மோதுவார்கள். முதல் 3 இடங்களை பிடிப்பவர்கள் 2026-ம்
ஆண்டு நடைபெறும் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் கலந்து கொள்ள தகுதி பெறுவார்கள். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரரே, உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் விளையாட தகுதி பெறுவார். கேண்டிடேட்ஸ் தொடரின் வெற்றியாளர், தற்போது உலக சாம்பியனாக உள்ள இந்தியாவின் டி.குகேஷுடன் பலப்பரீட்சை நடத்துவார்.

5 months ago
6







English (US) ·