அண்ணா பல்கலை.க்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

8 months ago 9
ARTICLE AD BOX

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

தகவல் அறிந்த கோட்டூர்புரம் காவல் நிலைய போலீஸார் வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் பல்கலைக்கழக வளாகம் முழுவதும் தீவிர சோதனையிட்டனர். சோதனையின் முடிவில் சந்தேகத்துக்கு இடமான எந்த பொருளும் சிக்கவில்லை. எனவே, புரளியை கிளப்பும் வகையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Read Entire Article