ARTICLE AD BOX

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 5 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. கடைசியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தது பஞ்சாப் அணி. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி 246 ரன்களை இலக்காக கொடுத்த போதிலும் வெற்றியை வசப்படுத்த முடியாமல் போனது. அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 141 ரன்கள் விளாசி தனிநபராக பஞ்சாப் அணியின் வெற்றியை சூறையாடினார்.

8 months ago
8







English (US) ·