அன்னூர் அருகே போதை இளைஞர் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

4 months ago 6
ARTICLE AD BOX

கோவை: கோவை மாவட்​டம் அன்​னூர் அரு​கே​யுள்ள சொக்​கம்​பாளை​யம் பகு​தி​யில் நேற்று மதி​யம் இளைஞர் ஒரு​வர் போதை​யில் சாலை​யில் தள்​ளாடியபடியே வந்​தார். திடீரென அவர் சாலை​யில் கிடந்த கற்​களை எடுத்​து, நடந்து சென்​றவர்​கள் மீது வீசி​னார்.

இதில், அங்கு சென்ற சின்​ன​சாமி(65), வேலுமணி, கவி​தா, கார்த்​திகா ஆகியோர் காயமடைந்​தனர். சொக்​கம்​பாளை​யத்​தைச் சேர்ந்த சகுந்​தலா(55) என்​பவர் மீது கல் விழுந்​த​தில் நிலை தடு​மாறி கீழே விழுந்​தார். அப்​போது, சகுந்​தலா​வின் தலை​யில் மீண்​டும் பெரிய கல்லை தூக்கி போட்​டார். அதில் பலத்த காயமடைந்த சகுந்​தலா அந்த இடத்​திலேயே உயி​ரிழந்​தார்.

Read Entire Article