ARTICLE AD BOX

சென்னை: சென்னையில் அமெரிக்க தூதரகம், பாஜக அலுவலகம் உட்பட 4 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் அண்மைக் காலமாக தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. அண்மையில் கூட பாகிஸ்தான் தீவிரவாதிகள் பெயரில் உயர் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீஸாரின் விசாரணையில், மிரட்டல் கும்பல் வெளிநாட்டிலிருந்து செயல்படுவது தெரியவந்துள்ளது.
அவர்களை சர்வதேச போலீஸார் உதவியுடன் கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள 9 வெளிநாட்டு துணை தூதரகங்களுக்கு மர்ம நபர்கள் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.

2 months ago
4







English (US) ·