அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இளைஞரை வெட்டிக் கொன்ற மர்ம கும்பல்!

9 months ago 8
ARTICLE AD BOX

ஆவடி: அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை - அம்பத்தூர், ஆசிரியர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தினேஷ் பாபு (35). ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்த இவர், அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே உள்ள பேட்மிண்டன் கிளப்பில் தினந்தோறும் பேட்மிண்டன் பயிற்சியில் ஈடுபட்டு வருவது வழக்கம். அந்த வகையில், வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் பேட்மிண்டன் பயிற்சிக்காக தன் மோட்டார் சைக்கிளில் தினேஷ்பாபு சென்று கொண்டிருந்தார். அப்போது, தினேஷ்பாபுவை பின்தொடர்ந்து சென்ற மர்ம கும்பல், அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தினேஷ்பாபுவை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது.

Read Entire Article