ARTICLE AD BOX

தோஹா: ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இருமுறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா வரும் 24-ம் தேதி பெங்களூருவில் நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக இந்த போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, இந்த போட்டியில் கலந்து கொள்வதற்கு பாகிஸ்தானை சேர்ந்த ஒலிம்பிக் சாம்பியனான அர்ஷத் நதீமுக்கு, நீரஜ் சோப்ரா
அழைப்பு விடுத்திருந்தார். அவர், அழைப்பு விடுத்த அடுத்த சில நாட்களில்தான் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடைபெற்றது. இதனால்
நீரஜ் சோப்ராவையும், அவரது குடும்பத்தையும் சமூக வலைதளங்களில் சிலர் கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் தோஹாவில் நடைபெற உள்ள டைமண்ட் லீக்கில் பங்கேற்க சென்றுள்ள நீரஜ் சோப்ரா கூறியதாவது:

7 months ago
8







English (US) ·