ஆக.2-ல் தமிழகத்தில் ‘சிம்பொனி’ விருந்து: இளையராஜா தகவல்

6 months ago 8
ARTICLE AD BOX

லண்டன் சிம்பொனி இசைக் கலைஞர்களுடன் ஆகஸ்ட் 2-ம் தேதி தமிழகத்தில் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக இளையராஜா தெரிவித்துள்ளார்.

இன்று தனது 83-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார் இசையமைப்பாளர் இளையராஜா. அவருக்கு பலரும் நேரில், தொலைபேசி வாயிலாகவும், இணையத்திலும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இன்று காலை தனது அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் மத்தியில் இளையராஜா பேசும்போது, “எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முக்கிய பிரமுகர்களுக்கும், திரையுலக பிரபலங்களுக்கும், நேரில் வந்து வாழ்த்திய ரசிகர்களுக்கும் நன்றி. எனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற வெளியூரில் இருந்து எல்லாம் சிரமப்பட்டு வந்திருக்கிறார்கள். இணையத்தில் பிறந்தநாள் வாழ்த்து கூறிக் கொண்டிருப்பவர்களுக்கும் நன்றி.

Read Entire Article