ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி: தென் கொரியாவில் இன்று தொடக்கம்

7 months ago 9
ARTICLE AD BOX

குமி: 26-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தென் கொரியாவின் குமி நகரில் இன்று தொடங்குகிறது. வரும் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆசிய கண்டங்களைச் சேர்ந்த 43 நாடுகளில் இருந்து 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் இருந்து 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.

இந்தத் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்ற இந்தியாவின் நட்சத்திர வீரரான நீரஜ் சோப்ரா பங்கேற்கவில்லை. அதேவேளையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் கலந்துகொள்கிறார். இந்தியாவில் இருந்து அனுபவம் குறைந்த சச்சின் யாதவ், யஷ்விர் சிங் பங்கேற்கின்றனர்.

Read Entire Article