ஆடுகளத்தை கணித்து விளையாடியதால் வெற்றி: மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா குதூகலம்

8 months ago 8
ARTICLE AD BOX

மும்பை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடி பட்டாளங்கள் நிறைந்த ஹைதராபாத் அணியை 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மும்பை அணியின் பந்து வீச்சு துறை. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில், 40 ரன்கள் சேர்த்தார்.

டிராவிஸ் ஹெட் 28, இஷான் கிஷன் 2, நித்திஷ் குமார் ரெட்டி 19 ரன்கள் சேர்த்தனர். இறுதி பகுதியில் ஹென்ரிச் கிளாசன் 28 பந்துகளில், 37 ரன்களும் அன்கித் வர்மா 8 பந்துகளில் 18 ரன்களும் விளாசியதால் ஹைதராபாத் அணியால் 160 ரன்களை கடக்க முடிந்திருந்தது. மும்பை அணியின் பந்து வீச்சில் வில் ஜேக்ஸ் 3 ஓவர்களை வீசி 14 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

Read Entire Article