ARTICLE AD BOX

திருவள்ளூர்: ஆந்திராவிலிருந்து சென்னைக்கு வாடகை காரில் 2,520 போதை மாத்திரைகளை கடத்தியது தொடர்பாக, சென்னையை சேர்ந்த இளைஞர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பொன்பாடி சோதனைச் சாவடியில் நேற்று அதிகாலை மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆந்திர மாநிலத்திலிருந்து திருத்தணி நோக்கி வந்த வாடகை காரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.

8 months ago
8







English (US) ·