ARTICLE AD BOX

ஆன்லைன் முதலீடு மோசடி அதிகமாக நடைபெறுவதால் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்கும்படி, சென்னை காவல் ஆணையர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் நேற்று விடுத்த செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: அண்மைக்காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இதில், பிரபலமான நிதி நிறுவனங்களின் பெயரை போலியாக பயன்படுத்தி, அப்பாவி பொதுமக்களை மோசடி நபர்கள் ஏமாற்றி வருகின்றனர். இந்நிலையில், தற்போது, சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப் பிரிவு சைபர் கிரைம் பிரிவில் ஒரு குறிப்பிட்ட நிதி நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி மோசடி நடைபெறுவதாக அதிகமான புகார்கள் வந்துள்ளன.

4 months ago
5







English (US) ·