ARTICLE AD BOX

சென்னை: சென்னை தி.நகரில் வசிப்பவர் பிரபல தொழில் அதிபர் கிஷோர். இவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு வந்த செய்தியில், எங்களது வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்து நாங்கள் ஆலோசனை கூறும் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பிய கிஷோர், அந்த வாட்ஸ்-அப் குழுவில் சேர்ந்துள்ளார். பின்னர் மோசடி நபர்கள் அனுப்பிய லிங்க் (Link) மூலமாக ஆன்லைன் பங்கு வர்த்தகம் செய்ய பல்வேறு வங்கிக் கணக்குகளில் பல பரிவர்த்தனைகளில் ரூ.2 கோடியே 26 லட்சம் பணம் அனுப்பி முதலீடு செய்ய அறிவுறுத்தியுள்ளார்.

3 months ago
5







English (US) ·