ஆன்லைன் வர்த்தகம் என்ற பெயரில் தொழிலதிபரிடம் ரூ.1.43 கோடி மோசடி: சென்னையில் இருவர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

சென்னை: ஆன்லைன் வர்த்தக முதலீடு என்ற பெயரில் தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 43 லட்சம் பறித்த முன்னாள் வங்கி மேலாளர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, பெருங்குடியில் வசிப்பவர் கார்த்திக் (36). பைனான்ஸ் தொழில் செய்து வரும் இவர், கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் வந்த ஆன்லைன் வர்த்தக முதலீட்டு விளம்பரம் ஒன்றை பார்த்தார். அதில், முதலீட்டுக்கு இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதை உண்மை என நம்பிய கார்த்திக், அவர்கள் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டார். பின்னர், எதிர் தரப்பினர் அறிவுறுத்தியபடி வாட்ஸ் ஆப் குழு ஒன்றில் இணைந்தார்.

Read Entire Article