ஆன்லைன் வர்த்தகம் மூலம் பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி - தலைமறைவாக இருந்தவர் கைது

10 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: ஆன்லைன் வியாபாரத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பள்ளி ஆசிரியையிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்ததாக நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பொன்னியம்மன்மேடு பகுதியைச் சேர்ந்த ஶ்ரீபிரியா (37) என்பவர், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு அவரது நண்பர் மூலம் சேலம் மாவட்டம், ஆத்தூர், புங்கவாடி கிராமத்தைச் சேர்ந்த சிவகுமார் (40) என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இவர், சென்னை வடபழனி, அழகிரி மெயின் ரோட்டில் ஆன்லைன் டிரேடிங் நிறுவனம் நடத்தி வருகிறார்.

Read Entire Article