ARTICLE AD BOX

பொள்ளாச்சி: சென்னையில் இருந்து ஆழியாறுக்கு சுற்றுலா வந்த கல்லூரி மாணவர்களில் 3 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். சென்னை பூந்தமல்லி பகுதியில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் 28 பேர், கல்லூரி கிளினிக்கல் தெரபிஸ்ட் சந்தோஷ்(23) தலைமையில் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தனர். அவர்கள் நேற்று காலை ஆழியாறுக்கு சுற்றுலா சென்றனர்.
ஆழியாறு அணை அருகே ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, பிசியோதெரபி 4-ம் ஆண்டு பயிலும் திருவெற்றியூரைச் சேர்ந்த ஜோசப் ஆண்டன் ஜெனிப் (21), தென்காசி ரேவந்த்(21), 3-ம் ஆண்டு பயிலும் சென்னை தருண் விஸ்வரங்கன்(19) ஆகியோர் நீரில் மூழ்கினர். அருகில் இருந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர்.

8 months ago
8







English (US) ·