ஆவடி அருகே கணவன், மனைவி இருவரை கொலை செய்த ஆந்திர இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை!

8 months ago 8
ARTICLE AD BOX

பூந்தமல்லி: ஆவடி அருகே சேக்காடு பகுதியில், கணவன், மனைவி இருவரை கொலை செய்த ஆந்திர இளைஞருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து பூந்தமல்லி கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே உள்ள சேக்காடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜெகதீசன்(67) - விலாசினி (58) தம்பதி. சென்னையில் உள்ள தமிழக அரசின் அச்சகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இத்தம்பதி, சேக்காடு - பண்ணை வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் - விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் (28), தன் மனைவி பூவலட்சுமி (22) மற்றும் 3 வயது மகன் ஆகியோருடன் கடந்த 2018-ம் ஆண்டில் ஜெகதீசனின் பண்ணை வீட்டின் அவுட் ஹவுஸில் தங்கி, பண்ணை வீட்டின் தோட்ட வேலைகளை செய்து வந்தார்.

Read Entire Article