ஆவடி: இணையதள மோசடியில் மக்கள் இழந்த ரூ.20.55 லட்சம் மீட்பு

7 months ago 8
ARTICLE AD BOX

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் இணையதள மோசடியில் பொதுமக்கள் இழந்த ரூ.20.55 லட்சத்தை போலீஸார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களில் சிலர், ‘ஆன்லைன்’ மூலம் பங்கு வர்த்தகம் மற்றும் பகுதி நேர வேலை வாய்ப்பு என்ற பெயரில் இணையதள மோசடியில் ஈடுபட்ட கும்பலிடம் பணத்தை இழந்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படை யில், வழக்குப் பதிவு செய்த ஆவடி இணையவழி குற்றப்பிரிவு போலீஸார், பொதுமக்கள் பணம் செலுத்திய மோசடி கும்பலின் வங்கிக் கணக்குக ளை அடையாளம் கண்டனர்.

Read Entire Article