இங்கிலாந்துக்கு எதிராக இரு இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் வரலாற்று சாதனை!

6 months ago 7
ARTICLE AD BOX

லீட்ஸ்: இங்கிலாந்து அணி உடனான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசி அசத்தியுள்ளார் இந்திய வீரர் ரிஷப் பந்த். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் சதம் விளாசிய முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்துள்ள இரண்டாவது விக்கெட் கீப்பர் ஆகியுள்ளார் பந்த். முன்னதாக, கடந்த 2001-ம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய ஆன்டி பிளவர், தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 142 மற்றும் 199 ரன்களை எடுத்திருந்தார். அவருக்கு பிறகு தற்போது பந்த், 134 மற்றும் 118 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article