ARTICLE AD BOX

மும்பை: அடுத்த மாதம் இங்கிலாந்தில் தொடங்கவுள்ள டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் இடம்பெற்றுள்ளார். டெஸ்ட் அணியில் முதல் முறையாக அவர் வாய்ப்பு பெற்றுள்ளார். அவரது தேர்வு குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர் அஜித் அகர்கர் சொல்லியுள்ளது என்ன என பார்ப்போம்.
கடந்த ரஞ்சிக் கோப்பை சீசனில் தமிழ்நாடு கிரிக்கெட் அணி காலிறுதி ஆட்டம் வரை முன்னேற சாய் சுதர்ஷன் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார். நடப்பு ஐபிஎல் சீசனில் 13 ஆட்டங்களில் விளையாடி 638 ரன்கள் எடுத்துள்ளார். அதன் மூலம் அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் அவர் உள்ளார்.

7 months ago
8







English (US) ·