இரிடியத்தில் முதலீடு எனக் கூறி ரூ.1.30 கோடி மோசடி: அதிமுக நிர்வாகி உள்பட 3 பேர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

விருதுநகர்: விருதுநகரில் இரிடியத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகக் கூறி ரூ.1.30 கோடி வரை பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி உள்பட 3 பேரை சிபிசிஐடி போலீஸார் இன்று கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டைச் சேர்ந்தவர் பழனிசெல்வம் (46). இவரிடம் ராஜபாளைம் அருகே உள்ள சேத்தூரைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவரும், சேத்தூர் பேரூராட்சி 8வது வார்டு அதிமுக செயலாளருமான பட்டு ராஜன் (52) மற்றும் அப்பகுதியில் பல்வேறு பெயர்களில் அறக்கட்டளை நடத்தி வந்த ராணி நாச்சியார் (53), கந்தநிலா (55) உள்ளிட்டோர் இரிடியத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகவும் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி கிடைக்கும் என்றும் கூறியுள்ளனர்.

Read Entire Article