ARTICLE AD BOX

சென்னை: ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் என இரிடியம் பெயரில் தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக 30 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்துள்ளனர்.
ரிசர்வ் வங்கி சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த ஆண்டு ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அதில், ‘பிளாட்டினம், தங்கத்தைவிட அதிக மதிப்புடைய இரிடியத்தை விற்பனை செய்து ரிசர்வ் வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருப்பதாகவும், அந்த பணத்தை பெற சேவை கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், இதற்காக ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை கூறி மோசடி கும்பல்கள் பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்தும், போலி ஆவணங்களை தயாரித்தும் இந்த மோசடி அரங்கேற்றப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.

3 months ago
5







English (US) ·