இரிடியம் முதலீட்டில் ரூ.1,000 கோடி மோசடி: தமிழகத்தில் 62 பேர் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

இரிடியம் முதலீட்டில் ரூ.1,000 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில், தமிழகத்தில் இதுவரை 62 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இரிடியத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.1 கோடி தரப்படும் என தமிழகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளது. இதற்காக ரிசர்வ் வங்கியில் பதிவு செய்தது போன்று போலியாக காட்டி இரிடியம் விற்பனையில், ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், 3 மாதத்தில் ரூ.1 கோடி லாபம் கிடைக்கும் எனக் கூறி இம்மோசடி நடந்துள்ளது.

Read Entire Article