உதகை | அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்த நபர் கைது

10 months ago 10
ARTICLE AD BOX

உதகை: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.51 லட்சம் மோசடி செய்த நபரை, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் போலீஸார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம், உதகையை சேர்ந்த சதாசிவம் மற்றும் பலர் கொடுத்த மனுவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி கோத்தகிரி ஊராட்சி அலுவலகத்தில் உதவி இயக்குநராக பணிபரிந்துவரும் கோத்தகிரி ஓரசோலை பகுதியைச் சார்ந்த மனோ என்பவர், தன்னையும் மேலும் 10 நபர்களையும் ஏமாற்றி விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறும் புகார் அளித்திருந்தார்.

Read Entire Article