உலக தடகள சாம்பியன்ஷிப்: நீரஜ் சோப்ரா இறுதிப் போட்டிக்கு தகுதி

3 months ago 5
ARTICLE AD BOX

டோக்கியோ: உலக தடகள சாம்பியன்ஷிப் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான ஈட்டி எறிதலில் தகுதி சுற்று நடைபெற்றது. தகுதி சுற்றில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றிருந்த நடப்பு சாம்பியனும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றவருமான இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 84.85 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார். நேரடியாக தகுதி பெறுவதற்கு 84.50 மீட்டர் போதுமானதாகும்.

தகுதி சுற்றில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவில் மொத்தம் 37 வீரர்கள் பங்கேற்றனர். 84.50 மீட்டர் தூரம் ஈட்டியை எறிபவர்கள் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள் எனவும், இல்லையென்றால் அதிக தூரம் ஈட்டியை எறிந்த 12 பேர் இறுதிப் போட்டிக்குள் நுழைவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் 27 வயதான நீரஜ் சோப்ரா ‘ஏ’ பிரிவில் முதல் நபராக 84.85 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார்.

Read Entire Article