உளுந்தூர்பேட்டை அருகே தாயை கொன்ற 14 வயது சிறுவன் கைது

2 months ago 4
ARTICLE AD BOX

கள்ளக்குறிச்சி: உளுந்​தூர்​பேட்டை அருகே தாயை கொலை செய்த 14 வயது மகனை போலீ​ஸார் கைது செய்​தனர். கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் உளுந்​தூர்​பேட்டை அடுத்த கீழக்​குப்​பம் வேலூர் கிராமத்​தைச் சேர்ந்​தவர் குணசேகரன் மனைவி மகேஸ்​வரி. இவர்​களுக்கு 2 மகன்​கள், 2 மகள்கள் உள்​ளனர். குணசேகரனுக்கு மதுப் பழக்​க​மும் இருந்​ததால் கணவன், மனை​விக்​கிடையே அடிக்​கடி தகராறு ஏற்​படு​மாம்.

இதே​போல, கடந்த 19-ம் தேதி​யும் குணசேகரன் தம்​ப​திக்​கிடையே தகராறு ஏற்​பட்​டுள்​ளது. இதில் ஆத்​திரமடைந்த குணசேகரன், மனைவி மகேஸ்​வரியை தாக்​கி​யுள்​ளார். பின்​னர் குணசேகரன் வெளியே சென்ற நிலை​யில், மகேஸ்​வரி தனது 14 வயது மகனிடம், “உனது தந்தை என்னை அடித்​த​போது ஏன் வேடிக்கை பார்த்​தாய்? நீ உனது தந்​தைக்கு ஆதர​வாக இருக்​கிறா​யா?” என்று கேட்​டு, அவரை அடித்​துள்​ளார். பின்​னர் மகேஸ்​வரி வயலுக்​குச் சென்​று​விட்​டார்.

Read Entire Article