ஊத்துக்கோட்டை- பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம்; போலி வருவாய்த் துறை ஊழியர் கைது

7 months ago 8
ARTICLE AD BOX

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதாக கூறி ஆயிரம் ரூபாய் பெற்ற போலி வருவாய்த் துறை ஊழியரை போலீஸார் கைது செய்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் கடந்த 20-ம் தேதி முதல் வருவாய்த் தீர்வாயம் ( ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வரும் வருவாய்த் தீர்வாயத்தில், பட்டா பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்க கடந்த 20-ம் தேதி ஊத்துக்கோட்டை சிற்றம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் வந்துள்ளார். அப்போது, வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வெளியே நின்றிருந்த, வடமதுரை, தந்தை பெரியார் நகரை சேர்ந்த செல்வின் (40) என்பவர், தன்னை வருவாய்த் துறை ஊழியர் எனக் கூறி ராஜேந்திரனிடம் பேச்சு கொடுத்துள்ளார்.

Read Entire Article