ஊரப்பாக்கத்தில் டேங்கர் லாரி பின்னால் கார் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் உயிரிழப்பு 

9 months ago 9
ARTICLE AD BOX

ஊரப்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கத்தில் முன்னால் சென்ற டேங்கர் லாரியில் கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்த மேலும் 3 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் பகுதியை சேர்ந்தவர் டேனிஷ் ரெட்டி (21), இவர் செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அருகே உள்ள வல்லாஞ்சேரி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பி.டெக், 3-ம் ஆண்டு படித்து வந்தார். ஆந்திரா மற்றும் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் படித்து வரும் இவரது நண்பர்கள் ஸ்ரேயர்ஸ் (21), ஹரிணி (21), உமா (20), முகமத் ஜைத் (19), ஆகிய 5 பேரும் இன்று (மார்ச் 6) அதிகாலை வல்லாசேரியில் இருந்து ஊரப்பாக்கம் நோக்கி ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர்.

Read Entire Article