ARTICLE AD BOX

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி நேற்று முன்தினம் சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சிஎஸ்கேவுக்கு இது 9-வது ஆட்டத்தில் 7-வது தோல்வியாக அமைந்தது. இதனால் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு மிகவும் மங்கி உள்ளது.
இந்நிலையில், ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்துக்கு பின்னர் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளரான ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: இந்த சீசனில் நாங்கள் வெளிப்படுத்திய திறனால் ஏலத்தில் முழுமையாக சரியானவற்றை பெற்றோம் என்பது சொல்வது கடினம். மற்ற அணிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளன, அதுதான் ஏலத்தின் புள்ளி. ஆனால் எங்களால் அதை சரியாக செய்ய முடியவில்லை. ஏலம் என்பது முழுமையான அறிவியல் இல்லை.

8 months ago
8







English (US) ·