ARTICLE AD BOX

கோவில்பட்டி: எட்டயபுரம் அருகே கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்தார். விபத்து ஏற்பட்ட பகுதியில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் வட்டம் களக்குடியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் சந்தனமாரி (33). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும் எட்டயபுரம் அருகே தெற்கு முத்துலாபுரத்தைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது கர்ப்பிணியாக உள்ள மகாலட்சுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வளைகாப்பு நடத்தி, தெற்கு முத்துலாபுரத்துக்கு வந்துள்ளார். இதனால் சந்தனமாரியும் தெற்கு முத்துலாபுரத்தில் தங்கியிருந்து மனைவியை கவனித்து வந்துள்ளார்.

3 months ago
5







English (US) ·