ARTICLE AD BOX

குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளரான தமிழகத்தைச் சேர்ந்த சாய் கிஷோர் இந்த சீசனில் சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு சீச னில் 4 ஆட்டங்களில் விளையாடி 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ள அவர், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்திலும் சிறப்பாக செயல்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘இந்து தமிழ்திசை’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில் சாய் கிஷோர் கூறும்போது, “ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நான் உட்பட 4 தமிழக வீரர்கள் விளையாடியது நல்ல அனுபவமாக இருந்தது. பிசிசிஐ நடத்தும் உள்நாட்டு போட்டிகளில் தமிழக அணி அதிக கோப்பைகளை வெல்லும் பட்சத்தில் இன்னும் ஏராளமான தமிழக வீரர்கள் பல்வேறு ஐபிஎல் அணிகளில் விளையாடும் வாய்ப்பை பெறுவார்கள்.

8 months ago
8







English (US) ·