ARTICLE AD BOX

மும்பை: எந்தவொரு பேட்ஸ்மேனுக்கும் பந்துவீசுவதற்கு பயப்பட மாட்டேன் என்று மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் ஜஸ்பிரீத் பும்ரா கூறியுள்ளார்.
உலகில் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்களில் மிகவும் அபாயகரமான பந்துவீச்சாளராக கருதப்படுபவர் ஜஸ்பிரீத் பும்ரா. டி20 போட்டிகளின் கடைசி ஓவர்களில் மிகச்சிறந்த முறையில் பந்துவீசி எந்தவொரு பேட்ஸ்மேனையும் திணறடிக்கும் அசாத்திய திறமை பெற்றவர் பும்ரா. கடந்த ஆண்டு ஏற்பட்ட காயம் காரணமாக பும்ரா சில மாதங்கள் ஓய்வில் இருந்தார். இதைத் தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரின் பாதியில்தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கினார் பும்ரா. இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 11 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார் அவர்.

7 months ago
8







English (US) ·