என் ரசிகர்களை சுயநலனுக்காக பயன்படுத்த மாட்டேன்: நடிகர் அஜித் அறிக்கை

4 months ago 6
ARTICLE AD BOX

“நான் இன்று என்னவாக இருக்கிறேனோ, அதற்கு முக்கிய காரணம் என் ரசிகர்களின் அன்பும், ஆதரவும்தான். உங்கள் அன்பை என் சுயலாபத்துக்காகவோ அல்லது தவறாகவோ பயன்படுத்தமாட்டேன்” என்று நடிகர் அஜித் கூறியுள்ளார். திரைப்பட துறையில் அடியெடுத்து வைத்து 33 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு நடிகர் அஜித் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன் விவரம்: “சினிமா எனும் அற்புதமான பயணத்தில் 33 வருடங்கள் நிறைவு செய்கிறேன். ஆனால், இதனை கொண்டாடுவதற்காக எழுதவில்லை. எனக்கு எண்களின் மீது நம்பிக்கை இல்லை. ஒவ்வொரு வருடமும் எனக்கு முக்கியமானதுதான். இந்தப் பயணத்துக்காக முழுமனதுடன் கைக்கூப்பி நன்றி தெரிவிக்கிறேன்.

Read Entire Article