என்னதான் ஆச்சு சிஎஸ்கேவுக்கு? - IPL 2025

8 months ago 8
ARTICLE AD BOX

ஐபிஎல் வரலாற்றில் 2008-ம் ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக சிஎஸ்கேவின் கோட்டையாக திகழும் சேப்பாக்கம் மைதானத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது. 17 வருடங்களுக்கு பிறகு அந்த அணி ரஜத் பட்டிதார் தலைமையில் வெற்றியை வசப்படுத்தியுள்ளது. இந்த ஆட்டத்தின் வாயிலாக சிஎஸ்கே அணி தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளி உள்ளது ஆர்சிபி.

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னர் சிஎஸ்கே சுழலில் ஆதிக்கம் செலுத்தும் அணி, ஆர்சிபி சுழலில் திணறக்கூடிய அணி என்ற கருத்து முன்னிறுத்தப்பட்டது. ஆனால் இந்த சித்தாந்தத்தை தகர்த்து எறிந்தது ஆர்சிபி. நூர் அகமது 4 ஓவர், ரவீந்திர ஜடேஜா 3, அஸ்வின் 2 ஆகியோர் கூட்டாக வீசிய 9 ஓவர்களில் 95 ரன்களை வேட்டையாடியது ஆர்சிபி. இந்த ரன் வேட்டையில் ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார், தேவ்தத் படிக்கல், பில் சால்ட் ஆகியோர் முக்கிய பங்குவகித்தனர்.

Read Entire Article