ARTICLE AD BOX

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் பாதத்தில் அடி வாங்கிய ரிஷப் பந்த் எலும்பு முறிவு காரணமாக இந்தத் தொடரில் இருந்து விலகியுள்ளார். உண்மையில், இன்னும் இந்த டெஸ்ட் போட்டியில் 4 நாட்கள் இருக்கும் போதும், கடைசி டெஸ்ட் போட்டி என்பது மிக முக்கியமான போட்டியாக இருக்கும்போதும் இந்திய அணிக்கு இது ஒரு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த டெஸ்ட்டில் கையில் அடிபட்டு ஆட முடியாமல் தவித்தார். இந்த டெஸ்ட் போட்டியில் கிறிஸ் வோக்ஸ் வீசிய ஃபுல் பந்தை ரிவர்ஸ் ஷாட் ஆடும் முனைப்புடன் வலது பாதத்தில் சரியான அடி வாங்கி ரத்தம் கொட்டியதோடு கால் உடனேயே பெரிய வீக்கம் கண்டது. இந்நிலையில், ஸ்கேன் எடுத்தபோது எலும்பு முறிவு ஏற்பட்டது தெரியவர, இந்தத் தொடரில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

5 months ago
6







English (US) ·