எழும்பூர் ரயில் நிலைய தொலைத்தொடர்பு அலுவலகத்தில் தீ விபத்து - கேபிள்கள் எரிந்து நாசம்

9 months ago 8
ARTICLE AD BOX

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் உள்ள தொலைத்தொடர்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதை, தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். இங்கு, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தொலைத்தொடர்பு கேபிள்கள் எரிந்து நாசமாகின.

தமிழகத்தில் முக்கியமான ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையம் உள்ளது. இந்நிலையத்தில் இருந்து 40-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இதுதவிர, இந்த ரயில் நிலையத்தின் வழியாக, 200-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் செல்கின்றன. இதன் காரணமாக, இந்த ரயில் நிலையத்துக்கு தினசரி சுமார் ஒரு லட்சம் பேர் வந்து செல்கின்றன. காலை முதல் நள்ளிரவு வரை எப்போதும், பரபரப்பாக இருக்கும் இந்த நிலையத்தில் உள்ள தொலைதொடர்பு அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Read Entire Article