ARTICLE AD BOX

புதுச்சேரி: ஏஐ செயலியை விற்பதாகக் கூறி ரூ. 3.5 கோடி மோசடி செய்த சென்னை பொறியியல் பட்டதாரி கைது செய்யப்பட்டார்.
ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் வணிகத்துக்கான செயலி இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் சமூக வலைதளத்தில் விளம்பரம் வெளியானது. இதைப் பார்த்த பலரும் அந்தச் செயலியை வாங்கி, ரூ.40 ஆயிரம் செலுத்தியுள்ளனர். ஆனால் அந்த செயலி வேலை செய்யவில்லை. மேலும், செயலியை விற்றவரையும் தொடர்புகொள்ள முடியவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட 7 பேர் புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸில் புகார் தெரிவித்தனர்.

7 months ago
8







English (US) ·