ARTICLE AD BOX

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஃபார்மில் இல்லாவிட்டாலும் அவர் மைதானத்தில் ஒரு போட்டியில் ஆடிவிட்டு ஓய்வு பெறாமல் அப்படியே ஓய்வு அறிவித்து வெள்ளைச் சீருடையைக் கழற்றியது பலருக்கும் வருத்தமே. ஆனால் ஹர்பஜன் சிங்கின் மகள் ஹினயா, தன் ஆதங்கத்தை கோலியிடமே கேட்டு விட்டாள். இது விராட் கோலிக்கு மட்டற்ற நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள் எடுத்து 10,000 கனவு ரன்களைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் ஓய்வு பெற்று விட்டார். விராட் கோலி ஓய்வு பெற்ற பின் ஹர்பஜன் சிங் ‘ஏன் விராட் ஏன்?’ என்று ட்வீட் செய்தார். மேலும் தன் மகள் ஹினயாவும் தன்னிடம், ‘அப்பா ஏன் விராட் ஓய்வு பெற்றார்?’ என்று கேட்டதாக இன்ஸ்டண்ட் பாலிவுட்டில் தெரிவித்தார்.

7 months ago
8







English (US) ·